வாழும் வள்ளுவர்
இரா. இளங்குமரனாருக்கு
மனிதரில் புனிதர்
பட்டம் வழங்கி சிறப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தமிழ்ச்சங்கம் சார்பில் 13.12.2013 அன்று நடைபெற்ற முதலாம் ஆண்டு நிறைவு விழாவில் பங்குகொண்டு சிறப்புரை ஆற்றிய முதுமுனைவர் இரா.இளங்குமரானருக்கு வாழும் வள்ளுவர் என்ற பட்டம் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்ட தமிழ்ச்சங்கத்தின் வளைதளம், வலைப்பூ, முகநூல் ஆகியவற்றை தொடங்கி வைக்கிறார் மனிதரில் புனிதர் இரா. இளங்குமரனார்.
மனிதரில் புனிதர் இரா. இளங்குமரானார் திருவண்ணாமலை மாவட்ட தமிழ்ச்சங்க முதலாம் ஆண்டு நிறைவு விழாவில் திருக்குறள் பலகையில் திருக்குறளை எழுதி தொடங்கிவைக்கிறார்
திருவண்ணாமலை மாவட்டத் தமிழ்ச்சங்க முதல் ஆண்டு நிறைவு விழா முன்னிட்டு சிறப்பு இலக்கியக்கூட்டம்
சிறப்புரை
வாழும் வள்ளுவர், முதுமுனைவர்
இரா. இளங்குமரனார், அவர்கள்
நிறுவனர், திருவள்ளுவர் தவச்சாலை, அல்லூர், திருச்சி
இடம் - லட்சுமி அரங்கநாதன், திருமண மண்டபம், பெரிய தெரு, திருவண்ணாமலை.
நாள் - 13/12/2013
நேரம் - மாலை 5.00 மணி
டெல்லி தமிழ்மாநாட்டிற்கு சென்றுவந்த தமிழறிஞர்களுக்கு பாராட்டுவிழா
திருவண்ணாமலை
கருணீகர்மட வளாகத்தில் பாரதியார் தமிழ்ச்சங்கம் சார்பில் டெல்லியில் நடைபெற்ற அகில
இந்திய தமிழ் அமைப்புகளின் மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்த தமிழ் அறிஞர்களுக்கு
பாராட்டுவிழா நடைபெற்றது. இவ்விழாவில்தான் திருவண்ணாமலை மாவட்டத் தமிழ்ச்சங்கம் ஏற்படுத்தப்படவேண்டும்
என்ற கோரிக்கை ஏற்கப்பட்டு திருவண்ணாமலை மாவட்டத் தமிழ்ச்சங்கம் தொடங்கும் பணிகள் பாரதியார்
தமிழ்ச்சங்கத் தலைவர் எக்னோரா இந்திராஜன் தலைமையில் தொடங்கின.
திருவண்ணாமலை மாவட்ட தமிழ்ச்சங்கம் தொடக்கவிழா
திருவண்ணாமலை
மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களிலும் தமிழ்ச்சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டு இறுதியாக திருவண்ணாமலை
மாவட்ட தமிழ்ச்சங்கம் 23/12/2012 அன்று திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில்
வளாகத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தலைவர் திரு. நட்ராஜ் ஐ.பி.எஸ்.
அவர்கள் தலைமையில் ஏற்படுத்தப்பட்டது.
தில்லி
தமிழ்ச்சங்க பொதுச்செயலாளர் முகுந்தன் அவர்களுக்கு பாராட்டுவிழா
திருவண்ணாமலை
மாவட்டத்தமிழ்ச்சங்கம் சார்பில் சித்திரையில் ஐம்பெரும்விழா என்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வரால் தமிழ்த்தாய் விருது பெற்ற
தில்லி தமிழ்ச்சங்க பொதுச்செயலர் முகுந்தன் அவர்களைப்பாராட்டி திருவண்ணாமலை
நகர மன்றத்தலைவர் திரு. பாலச்சந்தர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தமிழ்ச்சங்கத்தலவைர்
பா. இந்திரராஜன் அவர்கள் பாராட்டியபோது எடுத்த
படம்.